ஈசல்
உன்னை ஆணவமாய் பார்த்து
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்-விடு,
உன்னை பாவி யென பழித்தாலும்
குறை கூறினாலும் -விடு,
உன்னை கேலி செய்தாலும்-கூட
ஒருநாளும் வேதனை கொள்ளாதே!
அக்கூட்டம் ஈசலை போல - ஒன்று
போனால் மற்றொன்று தோன்றும்
அவர்களின் ஆணவச் சிரிப்பு-ஈசலின்
வாழ்வை போல அன்றொரு நாள் மட்டுமே!
ஈசலின் ஆணவச்சிரிப்பு ஈட்டியை
சிதைக்குமா யென்ன!
ஈட்டி போல் கூர்மையாய் இரு
உன் திறனை வாதத்தில் -காட்டாதே!
செயலாய் செயல்படுத்தி
அறிவொளியாய் நின்று காட்டு!
ஈசல்களை கொல்வதல்ல -நம்
இலக்கு இமயத்தை வெல்வது ஒன்றே!
-கவிக்குயவன்
(செங்கை)
No comments:
Post a Comment