Friday, 27 January 2017

நான் வீழ்வேன் என நினைத்தாயோ!

மதிகெட்டுத் திறிந்தேன்  நான்
     விதியாடும் ஆட்டத்தில்
சதி வலையில் துள்ளும் மீனாய்
     தவித்தேன் உறவுகள் கூட
என்னை உணவாக்க ஏங்கின,

உடன் பிறந்த சகோதரனே -தன்
     உணவுக்கு என் உயிரை
உலையில் வைத்தான் - அவன்
    சதியறியாமல் சாக்கடையை
சந்தனமென நம்பியிருந்தேன்,

உடன் பிறவா சகோதரன்
என் துணைநிற்க !
தோழன் தோள்கொடுக்க
வெறும் சாக்கடையின் நாற்றத்தில்
நான்வீழ்வேன் எனநினைத்தாயோ!

                      -கவிக்குயவன்
                            (செங்கை)


1 comment:

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24