உன் கைகளை பிடித்துக் கொள் என்றாய் நம்பிக்கை கொண்டேன்!
உன் கால்களை
என் கால்களால் மிதிக்கின்றேன் இருந்தும்,
நீ !
என் பாதையில் சில முன்னேற்றம் தந்தாய்!
எனக்கு இன்னொரு
அன்னையாகி
தந்தையாகி
என்னுயிர் நண்பனுமாகிய என் "மிதிவண்டியே ! "
உன்னுடன் என் பயணங்களில் கவலைகள் மறந்த நிலையில் ஆனந்த காற்றை சுவாசிக்கின்றேன்,
இரவலாய் வந்த
என் இறைவனே !
என்றும் உன்னை நேசிக்கிற இந்த அடியேனின் பிழைகளை மன்னித்தருள்வாயாக !
"என் அன்பு மிதிவண்டியே"
படைப்பு
கவிக்குயவன்
செங்கை-603001
08/11/2018
No comments:
Post a Comment